பெங்களூருவில் இரண்டு மகாமகம் காணப்போகும் சொத்துகுவிப்பு வழக்கு, 'ஜெ.வின் சொத்துகுவிப்பு வழக்கு' என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. உண்மையில் அது 'ஜெ.வின் ஊழல் சொத்துகுவிப்பு வழக்கு' என்றே குறிப்பிடப்படவேண்டும். 'ஊழல்' என்கிற வார்த்தையை பெரும்பாலான பத்திரிக்கைகள் பயன்படுத்ததவறுகின்றன, 2ஜி ஊழல் வழக்கு எப்படியோ அதேபோலத்தான் ஜெவின் ஊழல் வழக்கும். போகட்டும், இலக்கண வகுப்பு எடுப்பது என் எண்ணமில்லை. விஷயம் என்னன்னா, அசோக சக்கரவர்த்தி குளம் வெட்டி மரம் நட்ட நாட்களிலிருந்து ஜெவின் ஊழல் சொத்துகுவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. செவ்வாய்கிரகத்தில் மனிதன் குடியேறி அந்தகிரகத்தின் சுற்றுப்புற சூழ்நிலையை மாசுபடுத்தும் திருநாள் வரை இந்த வழக்கு நடைபெறும் என்ற பேருண்மையை கண்டுணர்ந்த திமுக, மேற்படி வழக்கினை உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடத்திடவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறது. அந்த மனுவுக்கு பதில் சொல்வதற்கும் வாய்தா வாங்கியது ஜெவின் வாய்தா அணி,சாரி வழக்கறிஞர் அணி.
இந்நேரம் பார்த்து கர்நாடக அரசு சார்பாக சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆச்சார்யா 'மன் உளைச்சலை' காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அசைக்கவே முடியாத ஆலமரமாக இருந்த ஆச்சார்யா தானாகவே சாய்ந்ததை சுவீட் எடுத்து கொண்டாடி வருகிறது போயஸ் கார்டன். உண்மையில், ஆச்சார்யா இப்போதுதான் அதிக நெருக்கடியை ஜெவுக்கு தந்திருக்கிறார் என்பது என் எண்ணம். கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்படுவதாக ஆச்சார்யாவுக்கு குச்சி ஐஸை காட்டி ஏற்கனவே ஏமாந்திருந்த ஒரு லாபியினர், அவருக்கு தொடர்ந்து இம்சையை கொடுத்து வந்திருக்கின்றனறர். இவரும் எவ்வளவோ பொறுத்தப்பார்த்தார், முடியவில்லை. இப்போது உச்ச நீதிமன்றத்தின் முன்பாக வழக்கு வந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது என்று திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருக்கும் இந்நேரத்தில் ஆச்சார்யாவின் ராஜினாமாவுக்கான காரணத்தையும் சொல்லி திமுக அடுத்த முறை வாதம் செய்யும். ராஜினாமா முடிவு ஆச்சார்யா தானாக எடுத்த முடிவாகயிருக்காது, நிச்சயம் ஏதோ உள்குத்து நடந்திருக்கவேண்டும். திமுக மனு செய்திருக்கும் வேளையில் ஆச்சார்யாவின் ராஜினாமா எழுப்பப்போகும் அதிர்வுகள் ரிக்டர் அளவுகோளில் குறிப்பிடத்தக்க பதிவுகளை தேவையானவர்கள் எதிர்பார்த்திருந்த அளவுக்கு ஏற்படுத்தும். கூட்டிகழிச்சுப்பாருங்க, கணக்கு சரியா வரும். எது எப்படியோ, கிரிஸ்டலை தின்னவன் ஹெ2ஓவை குடிச்சுத்தான் ஆகணும்.