Friday, December 9, 2011

என்னவோ போங்க

"விவேகம் என்னும் வெள்ளி முளைத்து சாதி மதப்பித்து என்னும் சனி தொலைந்தால்தான் சமத்துவம் என்னும் ஞாயிறு பிறக்கும்."

இதை யார் சொன்னாங்கன்னு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. நான் சொல்ல வருவது இதிலுள்ள பிழையைப்பற்றியது. சொற்குற்றமும் உண்டு பொருள் குற்றமும் உண்டு.

விவேகம் என்னும் வெள்ளி முளைத்து சாதி மதப்பித்து என்னும் சனி தொலைந்தால்தான்…”

வெள்ளி முளைத்து சனி தொலையாது. மாறாக, வெள்ளி தொலைந்தால்தான் சனி முளைக்கும். ஒருவேளை நீங்கள் வெள்ளி முளைத்துதான் சனி தொலைகிறது என்ற ஆழ்ந்த நம்பிக்கை உடையவராகயிருந்தால், அடுத்த வரிக்கு என்ன பதில் சொல்வீர்கள்? அதாவது,

சனி தொலைந்தால்தான் சமத்துவம் என்னும் ஞாயிறு பிறக்கும்

ஆக, வெள்ளிக்கு அடுத்த சனி வரும்போது வெள்ளி முளைக்கிறதாம், சனி தொலைகிறதாம். ஆனால் அதே சனிக்கு அப்புறம் வரும் ஞாயிறு மட்டும் சனி தொலைந்து ஞாயிறு பிறக்கிறதாம்.

அப்படியென்றால் அந்த வாக்கியம் எப்படியிருந்திருக்க வேண்டும்?
"
விவேகம் என்னும் வெள்ளி தொலைந்து, சாதிமதபித்து என்னும் சனி முளைத்தால்தான், சமத்துவம் என்னும் ஞாயிறு பிறக்கும்."


அர்த்தமே மாறிவிட்டது அல்லவா?

உனக்கென்னப்பா, தப்பு கண்டுபிடிப்பது ரொம்ப சுலபம், தப்பு கண்டுபிடித்தே பெயர் வாங்கும் நக்கீரன் நீ, எங்கே உன்னால் இதை சரியாக எழுதமுடியுமா சொல் பார்க்கலாம் என்று நினைக்கிறீர்களா? சரி, வருவோம்.

"
சாதிமதபித்து என்னும் சனி தொலைந்து, சமத்துவம் என்னும் ஞாயிறு பிறந்தால்தான் மறுமலர்ச்சி என்னும் திங்கள் மலரும்"

இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய அளவுக்கு உயர்ந்த கருத்து அல்லதான், ஓகோ என்று இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது இருக்கிறது (இருக்கிறதுதானே!!??). முதலில் சொல்லப்பட்ட வாக்கியத்திற்கும் கடைசியாக அடியேன் சொன்ன வாக்கியத்திற்கும் உள்ள குறைந்தபட்ச வித்தியாசத்தையாவது உண்ர்ந்தீர்களா?

அரசாங்கத்தில் உயர் பதிவியிலிருந்தால் நீங்கள் சொன்னதுதான் சட்டம். அதிகாரம் உங்களிடமிருந்தால் நீங்கள்தான் செம்மொழிகண்ட வள்ளுவர். நீங்கள் படைப்பதே காவியம். உங்கள் எழுத்துப்பிழைகூட நவீன இலக்கணம்தான். நமக்கு தேவை எதுகையும் மோனையும். அர்த்தம் இருக்கிறதா அல்லது வார்த்தை உபயோகத்தில் நேர்மையிருக்கிறதா என்பதெல்லாம் தேவையில்லை.

என்னங்க பண்றது? தொப்பி வச்சவனெல்லாம் டைரக்டருங்குறான். பேனாவுக்கு மை ஊத்தி கொடுத்து கையை நனைச்ச மிச்ச மையை தலையில தடவிக்கிறவன் எழுத்தாளன்றான். வீட்டுல குழம்புல உப்பு பத்தலேன்னு குழம்புசட்டியை உடைக்கிறவன் போராளின்னு பேனர் வச்சுக்குறான்.

சரி விட்டுத்தள்ளுங்க. இப்போ கிளைமாக்ஸ் காமெடியக்கேளுங்க.

நான், நீ என்று சொன்னால் உதடுகள்கூட ஒட்டாது. நாம் என்று சொன்னால்தான் உதடுகள்கூட ஒட்டும்.

புரியவில்லையா? தெளிவாக விளக்குகிறேன் கேளுங்கள்.

அழகிரி,ஸ்டாலின் என்று சொன்னால் உதடுகள்கூட ஒட்டாது. கனிமொழி என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும்.

No comments:

Post a Comment